×

நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ87.16

நாகர்கோவில், டிச.7: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன. பெட்ரோலுக்கு 27 காசுகளும், டீசலுக்கு 31 காசுகளும் உயர்ந்துள்ளது. அத்துடன் இரண்டு ஆண்டுகளில் மிக உயர்ந்த விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.16 ஆகவும், டீசல் ரூ.79.89 ஆகவும் நாகர்கோவிலில் நேற்று விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.92 ஆகவும், டீசல் ரூ.79.62 ஆகவும் விற்பனையாகியது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் தினசரி பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் விலை கணிசமாக உயர்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Nagercoil ,liter ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு