×

நிதியளிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி, டிச.7: மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது, தமிழக அரசு விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக உருவாக்கி  ேவளாண் சாகுபடி மட்டுமின்றி, வேளாண் வணிகத்திலும் மேம்பட செய்வதற்கு  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உழவர் உற்பத்தியாளர்  நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் துவங்க இடைநிலை மூலதன உதவி, கடன்  உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்கள்  அறிவிக்கப்பட்டது.

இடைநிலை மூலதன உதவி - உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் துவங்கியவுடன் அந்நிறுவனங்களில் உள்ள மூலதன பங்களிப்பினை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளை பொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். 5 ஆண்டுகள் முடிந்த பின் திருப்பி செலுத்தினால் போதுமானது.உழவர்  உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும் போது அடமானம் கோருவதுடன், வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும்.

இதனை கருத்தில்  கொண்டு ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு  வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்திற்க 50 சதவீத உத்தவாதத்தை தமிழக  அரசே வழங்கும். சலுகையுடன் கூடிய சுழல் நிதி - உழவர் உற்பத்தியாளர்  நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது, இதர வணிக  நடவடிக்கைகளுக்கு வழங்குவது போல் 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி  வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும்  வகையில் தமிழ்நாடு அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உழவர்  உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும்.

உழவர்  உற்பத்தியாளர் நிறுவனங்களை வலுப்படுத்த வணிக ரீதியாக வளரும் வகையில்  இத்திட்டத்தினை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்திட தமிழக அரசு ரூ.266.70 கோடி  ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண்மை விற்பனை  மற்றும் ேவளாண் வணிகத்துறை, நாப்கிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்  நீலகிரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு  பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : farmer producer companies ,
× RELATED கலெக்டர் எச்சரிக்கை உழவர்...