கிருஷ்ணகிரி,டிச.4: கிருஷ்ணகிரி மாவட்டத் தில் நேற்று ஒரே நாளில் 15 பேர் கொேரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் குணமடைந்து 24 பேர் வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 7 ஆயிரத்து 168 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 153 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உள்ளது.