×

கலாச்சார நிகழ்ச்சிகளில் காகித தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும்

கிருஷ்ணகிரி, டிச.4: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேசிய கொடி விதிகள் 2020 மற்றும் தேசிய நன்மதிப்பு சட்டம் 1971ன் படி, தேசிய கொடியின் நடைமுறை மரபுகள் மற்றும் முக்கியத்துவத்தை அறிந்திடும் வகையில் பொது அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் www.mha.gov.in  என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளும் வகையில், தேசிய கொடியின் நடைமுறை மரபுகள் முக்கியத்துவத்தை கடைபிடித்து, தேசிய கலாச்சார மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளில் மக்காத பிளாஸ்டிக் கொடிகளை முற்றிலுமாக தவிர்த்து, எளிதில் மக்கும் காகிதத்திலான தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டுமென அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

Tags : events ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை...