காரிமங்கலம் டிச.4: காரிமங்கலம் அருகே எளங்காளைபட்டியில் ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தில் ஐயப்பன் சிலை வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.