- Mallasamudram
- முல்லசமுத்திரம்
- திருச்செங்கோ வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
- கரமனூர்
- மாமுண்டி
- பாலமேடு
மல்லசமுத்திரம், ஆக.7: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில், வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில் 60 கிலோ எடை கொண்ட 1316 மூட்டைகளை கருமனூர், மாமுண்டி, பாலமேடு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.8001 முதல் ரூ.10591 வரையிலும், பி.டி., ரகம் ரூ.7172 முதல் ரூ.7939 வரையிலும், கொட்டு பருத்தி குவிண்டால் ரூ.4650 முதல் ரூ.6065 வரை ஏலம் போனது. மொத்தமாக ரூ.39.30 லட்சத்திற்கு ஏலம் போனது. சேலம், ஈரோடு, கோவை, அவினாசி பகுதியை சேர்ந்த வியபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். அடுத்த ஏலம் வரும் 13ம்தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
