×

நர்ஸ் மாயம்

திருச்சி, டிச. 4: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வெட்டிக்காடு கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது தங்கை பொன்மணி(23). இவர் தில்லைநகர் 6வது குறுக்கு தெருவில் உள்ள மருத்துவமனை விடுதியில் தங்கியிருந்து அதே மருத்துவமனையில் நர்ஸ்சாக பணியில் உள்ளார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி சொந்த ஊர் செல்வதாக கூறி சென்றவர் வீட்டிற்கு செல்லவில்லை. மேலும் இது குறித்து தில்லைநகர் போலீசில் மணிமாறன் புகார் அளித்தார். வழக்குப்பதிந்த எஸ்ஐ தங்கமணி, மாயமான பொன்மணியை தேடி வருகிறார்.

Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...