×

வங்கதேசத்தில் சந்தையில் திடீர் தீ

டாக்கா: வங்கதேச தலைநகரான டாக்காவில் உள்ள பாங்காபசார் சந்தையில் நேற்று காலை 6 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த 48 தீயணைப்பு துறை வாகனங்களும் விமான படை ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சுமார் 6 மணி நேரம் போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

The post வங்கதேசத்தில் சந்தையில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Bangpasar market ,Dinakaran ,
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...