×

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: காவல் ஆணையரகம் அறிவிப்பு

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ராத்தூர் தெரிவித்துள்ளார். பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை முதல் ஜன.1ம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. கடற்கரை மணல் பகுதிகளில் தற்காலிக காவல் உதவி மையங்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: காவல் ஆணையரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,New Year ,Police Commissionerate ,Police Commissioner ,Sandeeprai Rathore ,
× RELATED ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் விநாயகர்...