×

மேட்டூரில் ரூ.5947 கோடியில் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம்

சென்னை: மேட்டூரில் ரூ.5947 கோடியில் கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது. பாலமலை மற்றும் நவிப்பட்டியில் மின்நிலையம் அமைக்க கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் முதல்கட்ட பணிகளை தொடங்கியது.

The post மேட்டூரில் ரூ.5947 கோடியில் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Greenco Energies ,Neerethu Funal Power Plant ,Mettur ,Chennai ,Neerethu Funal Power Station ,Palamalai ,Navipatti ,Tamil Nadu Environment ,Dinakaran ,
× RELATED புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7...