×

தேசிய திறனறி தேர்வு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

சென்னை: அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் தகுதிப் படிப்புதவித்தொகை ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெறும்பட்சத்தில் அவர்களுக்கு படிப்புதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு 2024ல் நடக்க இருக்கிறது. இதற்கு டிசம்பர் 4ம் தேதி முதல் 22ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post தேசிய திறனறி தேர்வு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Directorate of Public Examinations ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை