×

அமைந்தகரை அருகே ரூ.35 லட்சம் மதிப்பு செல்போன்களை வாங்கி மோசடி செய்தவர் கைது..!!

சென்னை: சென்னை அமைந்தகரை அருகே செல்போன் கடை வியாபாரியிடம் ரூ.35 லட்சம் மதிப்பு செல்போன்களை வாங்கி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். அரவிந்தன் என்பவர் சந்திரசேகரிடம் பில் இல்லாமல் 27 ஐபோன்கள், 3 சாம்சங் செல்போன்களை வாங்கி விற்று பணம் தருவதாக கூறியுள்ளார். செல்போன்களை வாங்கிச் சென்ற அரவிந்தன் பணம் தராமல் தலைமறைவாகி உள்ளார். சந்திரசேகர் அளித்த புகாரை அடுத்து மும்பையில் தலைமறைவாகி இருந்த அரவிந்தனை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட அரவிந்தனிடம் திருடிச் சென்ற செல்போன்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அமைந்தகரை அருகே ரூ.35 லட்சம் மதிப்பு செல்போன்களை வாங்கி மோசடி செய்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Samanthakar ,Chennai ,Samindkar ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...