×

மர்மக்காய்ச்சலுக்கு போலீஸ்காரர் பலி

கூடலூர்: தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு 2 மகன்கள் . மூத்த மகன் அஜித்கபூர் சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராகவும், 2வது மகன் அனில்கபூர் (28) சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் காவலராகவும் உள்ளனர். அனில்கபூர் உடல்நிலை சரியில்லை என 15 நாள் மருத்துவ விடுப்பு எடுத்து கடந்த திங்களன்று லோயர்கேம்பில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை காய்ச்சல் அதிகமானதால் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அனில்கபூர் நேற்று திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தார்.

The post மர்மக்காய்ச்சலுக்கு போலீஸ்காரர் பலி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Theni District ,Loyerkamp ,Ajitkapur ,
× RELATED நாளை காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு