×

மட்டன் கொத்துக்கறி பிரியாணி

தேவையானவை :

கொத்துக்கறி – ஒரு கப்
பாசுமதி அரிசி – 2 கப்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

பட்டை, கிராம்பு, பிரியாணி இலை.
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
புதினா-மல்லி – கால் கப்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய், எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி – தலா 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சாதத்தை முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கொத்துக் கறியை மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
வேறு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனுடன் மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், வேக வைத்த கொத்துக்கறி, உப்பு சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வற்றி வரும்போது சாதம், புதினா, மல்லி சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் 10 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்த முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

The post மட்டன் கொத்துக்கறி பிரியாணி appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்