*இது உங்க ஏரியா
பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சியில் மலைபோல் தேங்கி க்கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற் றின் தாக்கம் இரண்டாவது அலையாக அதிவேகமாக பரவி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நேற்று (25ம் தேதி) ஞாயிற்றுக் கிழமை பொது ஊரடங்கு அறிவிக் கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக பெரம்ப லூர் நகராட்சியில் பழைய பஸ்டாண்டு, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ரோவர் வளைவு புறவழிச் சாலை, திருநகர் ஆலம்பாடி சாலை, வெங்கடேசபுரம், பு திய மதன கோபாலபுரம், 3 ரோடு என காணும்இடமெ ங்கும் குப்பைகள் அள்ளப் படாததால் தேங்கிக் கிடந் தன. மலைபோல் தேங்கிக் கிடந்த குப்பைகளால் துர்நாற்றம் வீசியது. புதியத் தொ ற்று உருவாகும் முன்பாக அ வற்றை அகற்றி அப்புறப்ப டுத்த வேண்டும் எனப் பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.