×

“வானிலை ஆய்வு மையத்தை கொச்சை படுத்துவதற்காக எதையும் நான் கூறவில்லை”: அன்புமணி ராமதாஸ் விளக்கம்

சென்னை: வானிலை ஆய்வு மையத்தை கொச்சை படுத்துவதற்காக எதையும் நான் கூறவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியிருந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்கவில்லை என்பது எனது ஆதங்கம். வெளிநாடுகளில் உள்ளது போல் ஏன் நமது வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமாக கணிக்க முடியவில்லை. இனிவரும் காலங்களில் இன்னும் அதிகம் மழை, புயல், வெள்ளம் வரும். துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில் தான், மக்கள் தங்களை காத்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

The post “வானிலை ஆய்வு மையத்தை கொச்சை படுத்துவதற்காக எதையும் நான் கூறவில்லை”: அன்புமணி ராமதாஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Meteorological Centre ,Anbumani Ramadoss ,CHENNAI ,BAMA ,President ,Meteorological Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு