×

தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சியில் மதிமுக கையெழுத்து இயக்கம்

காஞ்சிபுரம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிவிப்பின்படி காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக சார்பில், தமிழக அரசையும், மக்களையும் அனுதினமும் கொச்சைப்படுத்தும் தமிழக ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து கையெழுத்து இயக்க தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. காஞ்சிபுரம் மதிமுக மாவட்ட செயலாளர் இ.வளையாபதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி.இ.சத்யா, பேரறிஞர் அண்ணா இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, தமிழக ஆளுநரை திரும்பபெற வலியுறுத்தி முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்ட அவைத்தலைவர் கருணாகரன், பொருளாளர் கன்னியப்பன், மாவட்ட துணை செயலாளர் தயாளன், மணிவண்ணன், வெங்கடேசன், புஷ்பலதா ராமானுஜம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அருள், மூர்த்தி, ஆனந்தன், மாநகர செயலாளர் மகேஷ், ஒன்றிய செயலாளர்கள் அங்கம்பாக்கம் ஏழுமலை, ராவணன், மனோகரன், முச்சந்தி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அண்ணா வீட்டிலிருந்து ஊர்வலமாக சென்று பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பு மக்களிடத்திலும் ஆளுநர் ரவிக்கு எதிராக கையெழுத்து பெற்று வருகின்றனர்.

The post தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சியில் மதிமுக கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : MDMK ,Kanchi ,Tamil Nadu ,Union Government ,Kanchipuram ,general secretary ,Vaiko ,Kanchipuram district ,
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...