×

மணிப்பூரில் 2 பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அவலத்தை கண்டும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: எதிர்க்கட்சிகள் கேள்வி

டெல்லி: மணிப்பூரில் 2 பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அவலத்தை கண்டும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடியின் மவுனமும், செயலாற்ற நிர்வாகமும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை அராஜகத்திற்கு அழைத்து சென்றுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மணிப்பூரில் இந்தியா என்ற கொள்கை தாக்கப்படும் போது அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது என்றும், மணிப்பூர் மக்களுடன் ஒன்றுபட்டு நிற்போம் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

2 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகைப்படங்கள் நெஞ்சை பதறவைத்துள்ளன என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதேபோல ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூரில் 2 பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அவலத்தை கண்டும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: எதிர்க்கட்சிகள் கேள்வி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Manipur ,Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி