மதுரை: மதுரையில் நீதிபதி இல்லம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருபிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி.சூர்யா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். எஸ்ஜி.சூர்யாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நீதிபதியின் இல்லம் முன்பு நேற்று பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
The post மதுரையில் நீதிபதி இல்லம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.