×

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு..!!

மதுரை: வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தக்காளி, தேங்காய், முருங்கைக்காய் உள்ளிட்டவற்றின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இவ்வாரம் அதிகரித்துள்ளது. 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி விலை ரூ.350-ல் இருந்து ரூ.600 ஆக அதிகரித்தது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் விலை ரூ.55-ஆக உயர்ந்த நிலையில் நேற்று வாடிப்பட்டி சந்தையில் ஒரு தேங்காய் ரூ.28-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் விலை ரூ.50ல் இருந்து ரூ.70ஆகவும் வெங்காயம் விலை ரூ.40-ல் இருந்து ரூ.60 ஆகவும் உயர்ந்தது. மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல இடங்களில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தில் தினமும் 20,000 பெட்டிகள் தக்காளி வந்த நிலையில் 2 நாளாக 7,000 பெட்டிகளே வருகின்றன. வானிலை காரணமாக காய்கறிகள் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

The post வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து...