×

குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: குவைத் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட 20 தமிழ் இளைஞர்களும் எதிர்காலம் என்னவாகும் என்பதே தெரியாமலும், அடுத்த வேலை உணவுக்கு வழியில்லாமலும் தவிக்கின்றனர். குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக சம்பந்தப்பட்ட குவைத் நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களின் கடவுச்சீட்டு, ஊதிய நிலுவை ஆகியவற்றை பெற்றுக் கொடுத்து, 20 தமிழ் இளைஞர்களையும் தாயகத்திற்கு அழைத்து வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post குவைத்தில் தவிக்கும் 20 தமிழர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamils ,Kuwait ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramadas ,
× RELATED உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை