×

குருந்தங்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளது என பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: குருந்தங்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளது என பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை ஆட்சியர், மணல்மேல்குடி வட்டாரவளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. வருவாய் ஆவணங்களின்படி ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? தற்போதைய பரப்பளவு பற்றி பதிலளிக்க ஆணையிட்டுள்ளது. குருந்தங்குடி ஏரியின் நடுவே ஆக்கிரமிப்பாளர்களால் சாலை அமைக்கப்படுகிறதா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

The post குருந்தங்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளது என பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICOURT BRANCH ,KURUNTANGUDI BIG LAKE ,Madurai ,High Court ,Great Lake of Kuruntangudi ,Pudukkottai ,ICOURT ,Dinakaran ,
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...