×

கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் பிரபு பொறுப்பேற்று கொண்டார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காவல்துறையில் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றி வரும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் கபிலன் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த வெங்கடேஷ் பிரபு கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து நேற்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

வெங்கடேஷ் பிரபு கடந்த 2008ம் ஆண்டு எஸ் ஐ யாக பணியில் சேர்ந்து ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றினார். தொடர்ந்து 2020ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னை கொளத்தூர், சேலம், மேட்டூர், உறையூர், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றினார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற வெங்கடேஷ் பிரபுவிற்கு காவல்துறையினர் மற்றும் தொழிலதிபர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

The post கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : KRISHNAGIRI TOWN POLICE STATION ,Lord Venkatesh ,Dinakaran ,
× RELATED கண் நோய்களை குணமாக்கும் அவரைக்காய்!