×

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த இரு தினங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.160 ஆக உள்ளது. சென்னையில் மற்ற பகுதிகளில் ரூ.180க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 ஆக உள்ளது. நவீன் தக்காளி ரூ.160க்கும் வெங்காயம் ரூ.22க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிலோ இஞ்சியின் விலை ரூ.250 ஆகவும் பூண்டின் விலை ரூ.220ஆகவும் உள்ளது.

The post கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,Koyambedu, Chennai… ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து...