×

சென்னை கொளத்தூரில் ஆட்டிசம் பாதித்த சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது

சென்னை: சென்னை கொளத்தூரில் ஆட்டிசம் பாதித்த சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல்குள உரிமையாளர், பயிற்சியாளரை கைது செய்துள்ளனர். முறையாக பயிற்சி அளிக்காததால் நீச்சல் குளத்தில் 10 வயது சிறுவன் கிருத்திக் சபரீஷ்கர் உயிரிழந்தான். வாய் பேச முடியாத சிறுவன் சைகை காட்டியும் அதை கவனிக்காமல் கடுமையாக பயிற்சி அளித்ததால் உயிரிழந்துள்ளார். அஜாக்கிரதையாக பயிற்சி அளித்த நீச்சல்குள உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அவினேஷை கைது செய்துள்ளனர்.

The post சென்னை கொளத்தூரில் ஆட்டிசம் பாதித்த சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kolathur, Chennai. ,Chennai ,Kolathur, Chennai ,Krithik Sabareeshkar ,
× RELATED விநாயகர் சிலை: பணம் எடுத்ததாக ரவுடி மீது புகார்