×

பலாத்கார வழக்கில் தலைமறைவான கேரள வாலிபர் சென்னையில் கைது: விமான நிலையத்தில் சிக்கினார்

சென்னை; பலாத்கார வழக்கில் தலைமறைவான கேரள வாலிபர், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் அபீல் அபுபக்கர் (32). இவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்குகள் திருச்சூர் மாநகர போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. இதனால், போலீசாரின் பிடியில் சிக்காமல், வெளிநாட்டுக்கு அபீல் அபுபக்கர் தப்பி, தலைமறைவாகி விட்டார். அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என திருச்சூர் மாநகர காவல் ஆணையர் அறிவித்தார். இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், மற்றும் முக்கிய ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினர்.

இதில் வந்த கேரளாவை சேர்ந்த பயணியின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை கம்ப்யூட்டரில் வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், அவர் கேரளாவில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி அபீல் அபுபக்கர் என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அபீல் அபுபக்கரை விமான நிலையத்தை விட்டு வெளியே விடாமல், தனியறையில் குடியுரிமை அதிகாரிகள் அடைத்துவைத்தனர். இதுகுறித்து திருச்சூர் மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அங்கிருந்து கேரள தனிப்படை போலீசார் அபீல் அபுபக்கரை நேற்று கைதுசெய்து கேரளாவுக்கு அழைத்துச்சென்றனர்.

The post பலாத்கார வழக்கில் தலைமறைவான கேரள வாலிபர் சென்னையில் கைது: விமான நிலையத்தில் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai airport ,Abeel ,Malappuram, Kerala ,
× RELATED சென்னை விமான நிலையம் முதல்...