×

காரைக்காலில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திவரும் சாலைமறியலால் காரைக்கால் – கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் ரயில்பாதை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காரைக்கால் அடுத்த அம்பகதூர் ரயில்நிலையம் அருகே திருவாரூர் மாவட்டம் எல்லைப்பகுதி உள்ளது. அம்பகதூரிலிருந்து திருவாரூர் மாவட்டம் பகுதிகளான மேனங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை இணைக்கும் ஜவஹர் சாலையில் மக்கள் ரயில் பாதையை கடந்து செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட கிராமமக்கள் காரைக்கால் – கும்பகோணம் சாலையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த சாலையை பயன்படுத்துவதால் அவசர காலங்களில் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும் என்பதாலும் விவசாய நிலங்களில் விளைவிக்கப்பட்ட தானியங்களை எடுத்துச்செல்ல சுரங்கப்பாதை உதவும் எனவும் முக்கியமாக காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டபோதும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் அப்பகுதியில் சுமார் 4 கிமீ தொலைவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post காரைக்காலில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Puducherry ,Karaikal-Kumbakonam ,Karaikal, Puducherry ,
× RELATED இனி நீங்கள் ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது…