சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் தாயிடம் இதுவரை விசாரிக்காதது ஏன்? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாணவியின் தாயிடம் விசாரணை நடத்த நல்ல நாட்களுக்காக காத்து கொண்டிருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.