மதுரை: காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டங்களை தமிழகம் முழுவதும் அமல்படுத்துங்கள் என்று உயர்நீதிமன்ற கிளை யோசனை தெரிவித்துள்ளது. மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் தொடங்கி 6 மாதம் ஆகியும் சோதனை முறை என கூறுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை மலைப்பகுதிகளில் மட்டும் அமல்படுத்தினால் போதுமா? என்றும் ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. எத்தனை மாவட்டங்களில் சோதனை முறையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
The post காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டங்களை தமிழகம் முழுவதும் அமல்படுத்துங்கள்: ஐகோர்ட் கிளை யோசனை appeared first on Dinakaran.