×

மீஞ்சூர் பகுதிகளில் 3 வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை

பொன்னேரி: மீஞ்சூர் மற்றும் காட்டூர் பகுதிகளில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள், ரூ.2.25 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மீஞ்சூர் அடுத்த வேளூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (63). எல்ஐசி ஏஜென்ட். இவர் நேற்று முன் தினம்வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 2 பவுன் செயின், ரூ.6 ஆயிரத்து 500 ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

* மீஞ்சூர் அடுத்த திருவள்ளவாயல் பகுதி சேர்ந்தவர் தீபா (31). திருவெள்ளைவாயல் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம்வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்தது. அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், 5 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

* மீஞ்சூர் அடுத்த நாலூர் கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார் (69). திருவொற்றியூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 10 பவுன் நகைகள், ரொக்க பணம் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. மேற்கண்ட்ட சம்பவங்கள் குறித்து புகாரின்படி மீஞ்சூர் காவல போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போஒலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதனை நடத்தினர். 3 வீடுகளிலும் ரூ.2.25 லட்சம் ரொக்கம், 18 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடுகின்றனர்.

The post மீஞ்சூர் பகுதிகளில் 3 வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Meenjur ,Kattur ,
× RELATED திட்டமிட்டபடி 2025 ஜூன் மாதம்...