×

வீட்டில் நுழைந்து 20 சவரன் திருட்டு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த அகரம்தென் அவ்வையார் நகரை சேர்தவர் ரவி (55). இவருக்கு ஜெயந்தி (50) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஜெயந்தி, இரவு வேலை முடிந்ததும், பேருந்து மூலம் அகரம்தென் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். பின்னர், தனது மகளை செல்போனில் தொடர்புகொண்டு, தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். இதனையடுத்து ஜெயந்தியின் மகள், வீட்டின் முன்கதவை தாழ்பாள் மட்டும் போட்டுவிட்டு, தனது மொபட்டில் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று ஜெயந்தியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே ஒரு பெண் நின்றிருப்பதை கண்ட ஜெயந்தி, அவரிடம் சென்று, நீங்கள் யார், ஏன் இங்கு நின்றுகொண்டு இருக்கிறீர்கள் என கேட்டபோது, அந்த பெண் பதிலளிக்காமல் அங்கிருந்து அவசர அவசரமாக சென்றுவிட்டார். பின்னர் ஜெயந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஜெயந்தி, பீரோவின் உள்ளே பார்த்தபோது அதிலிருந்த 20 சவரன் நகை மாயமானது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பிய பெண்ணை தேடி வருகின்றனர்.

The post வீட்டில் நுழைந்து 20 சவரன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Ravi ,Avvaiyar Nagar ,Jayanthi ,
× RELATED வெல்டிங் தீப்பொறி விழுந்து விபரீதம்:...