×

இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக வழக்கு உதவி இயக்குநருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

சென்னை: இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சினிமா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏப்ரல் 30ம் தேதி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலக்குழி மரணம் என்ற தலைப்பில் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வெளியிட்டு பேசினார். இந்த பேச்சு இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பி.விக்னேஷ்வரன் என்கிற விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளில் அபிராமபுரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி விடுதலை சிகப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், கடவுள்களை அவமதிக்கும் வகையில் தாம் பேசவில்லை. அரசியலுக்காக பழிவாங்கும் நோக்குடன் போலியாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் காவல்துறை விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக வழக்கு உதவி இயக்குநருக்கு நிபந்தனை முன் ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Vimithya Chikappi ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...