×

மூலிகை ஜூஸ்

தேவையானவை:

துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி இலை, தூதுவளை,
புதினா – தலா கைப்பிடி,
இஞ்சி – 1 துண்டு,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
தனியா – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சை பழம் – 1,
உப்பு – தேவைக்கு,
தண்ணீர் – 2 டம்ளர்.

செய்முறை:

மேற்கூறிய மூலிகைககளை நன்கு அலசி அத்துடன் மிளகு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து விழுதாய் அரைத்து 2 டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சை சேர்த்து இளம் சூடாய் பருகவும். இது உடம்பு வலி, தொண்டை கரகரப்பு, சளி நீக்கும். குளிர்காலத்தில் அடிக்கடி பருகலாம்.

 

The post மூலிகை ஜூஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...