- தெற்கு மற்றும் மத்திய காசா
- ஹமாஸ்
- வடக்கு காசா
- இஸ்ரேல்
- ஜெருசலேம்
- பாலஸ்தீனியர்கள்
- காசா
- தெற்கு
- மத்திய காசா
- தின மலர்
ஜெருசலேம்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் 4வது மாதத்தை எட்டியுள்ளது. நீடிக்கும் இந்த போரில் இதுவரை 22,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். போரின் தொடக்கத்திலேயே வடக்கிலிருந்து தெற்கு காசாவுக்கு பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்து விட்டனர். இதையடுத்து வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பை குறி வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும்போது, “வடக்கு காசாவில் ஹமாசின் கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதால், அங்கிருந்து வௌியேறுகிறோம். தற்போது தெற்கு, மத்திய காசாவில் இஸ்ரேல் ராணுவம் கவனம் செலுத்தும்” என்று தெரிவித்தார். தெற்கு காசாவின் கான் யூனுஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.
The post தெற்கு, மத்திய காசாவில் தீவிர தாக்குதல் தொடர்கிறது வடக்கு காசாவில் ஹமாசின் கட்டமைப்பை அழித்து விட்டோம்: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு appeared first on Dinakaran.