×

சாக்கடைக்குள் கிடந்த துப்பாக்கி

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் சவுராஷ்ட்ரா தெரு அருகே மன்னார் பிள்ளை சந்தில் நேற்று சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்கடைக்குள் ஏர் பிஸ்டல் துப்பாக்கி ஒன்று கிடந்தது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இந்த துப்பாக்கி சாக்கடையில் வீசப்பட்டு பல மாதங்கள் ஆனது போல் துருப்பிடித்து இருந்ததும், அந்த துப்பாக்கியில் “ஏர் பிஸ்டல் மார்க்-3’’ என குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சாக்கடைக்குள் கிடந்த துப்பாக்கி appeared first on Dinakaran.

Tags : Municipal Corporation ,Mannar Pillai Chand ,Tiruchi Gandhi Market Saurashtra Street ,Gandhi Market ,Dinakaran ,
× RELATED பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி