×

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட விசிக நிர்வாகி சாவு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் (எ) சூசைநாதன் (49). விடுதலை சிறுத்தைகள் கட்சி கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர். இதே கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி (45) என்பவர், அவரது மனைவி பார்வதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு பிரச்னை செய்து வந்துள்ளார். இதை சூசைநாதன் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சின்னதம்பி, சம்பவத்தன்று இரவு வீட்டு முன் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த சூசைநாதன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூசைநாதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொலை வழக்கு பதிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சின்னதம்பி மற்றும் உடந்தையாக இருந்த அந்தோணி சாமிநாதன் (45), சகாயராஜ் (47) ஆகியோரை கைது செய்தனர்.

The post பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட விசிக நிர்வாகி சாவு appeared first on Dinakaran.

Tags : Vishik ,Ulundurpet ,Kalaiyarasan ,Soosainathan ,Erayur village ,Kallakurichi district ,Việtịnh Chiruṭhaal Party Education Economic Awareness Movement District ,Chinnathambi ,
× RELATED விசிக நிர்வாகி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி: தொழிலாளி கைது