×

போலி மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த 7 பேர் கொண்ட கும்பல் கைது!

ஈரோடு: போலி மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். சரக்கு லாரியில் ரகசிய அறை அமைத்து பெட்டிப் பெட்டியாக மதுபாட்டில்களை கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. புதுச்சேரியில் இருந்து காரில் வந்த 3 பேரை பிடித்த போலீஸ், அவர்களிடம் இருந்து 384 பாட்டில்களை பறிமுதல் செய்தது. பிடிபட்ட 3 பேர் அளித்த தகவலின்பேரில் சரக்கு லாரியை பிடித்து சோதனை செய்தபோது 2,016 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post போலி மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த 7 பேர் கொண்ட கும்பல் கைது! appeared first on Dinakaran.

Tags : Gang of 7 ,Erode ,of 7 ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு