சரக்கு ரயில் தடம் புரண்டது

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோவில் துப்காடி ரயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. பொகாரோ ஸ்டீல் ஆலையில் இருந்து இரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரயில் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் இரண்டு பெட்டிகள் பிரதான பாதையில் விழுந்து கிடந்தன.

இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 15 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விபத்தினால் பாதிக்கப்பட்ட ரயில் பாதையில் ஒன்று சீரமைக்கப்பட்ட நிலையில் மற்றொன்றை சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது.

The post சரக்கு ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Related Stories: