×

சரக்கு ரயில் தடம் புரண்டது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணி நிறைவு பெற்ற நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கொருக்குபேட்டைக்கு அரவைக்காக அனுப்பி வைக்க 2 ஆயிரம் மெட்ரிக் டன் சன்னரக நெல் மூட்டைகள் நாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. இதை ஏற்றி செல்ல 42 வேகன்களுடன் வந்த சரக்கு ரயிலை கடைசி பிளாட்பாரத்தில் நிறுத்த டிரைவர் முயற்சித்தார். அப்போது, டிராபிக் மேன் காட்டிய சிக்னல் சரியாக கிடைக்காததால் கடைசி பெட்டி சுவரின் முன் இருந்த கட்டையில் மோதி தடம் புரண்டது. இந்த சம்பவத்தின் போது பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரைக்காலில் இருந்து வந்த தடம் புரண்ட பெட்டியை ஜாக்கி மூலம் தண்டவாளத்தில் ஏற்றி வைத்தனர்.

The post சரக்கு ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Samba ,Nagapattinam District ,Thiruvallur District ,Korukubetta ,Dinakaran ,
× RELATED கணக்கெடுப்பில் விடுபட்ட...