×

விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு ரயிலில் தப்பிச் செல்லும் ராஜஸ்தான் கொள்ளையர்கள் கைது..!!

ஜெய்ப்பூர்: விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு ரயிலில் தப்பிச் செல்லும் ராஜஸ்தான் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். மாதவரம் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் பாலி சென்று 2 பேரை கைது செய்தனர். தினேஷ் குஜ்ஜார், ரமேஷ் பஞ்சாரா என்ற இரு கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். கடந்த 14ம் தேதி கவிதா என்ற பெண்ணிடம் மாதவரம் பகுதியில் 8 சவரன் செயின் பறித்துள்ளனர். வழக்கில் மகேந்திரகுமார் என்ற கொள்ளையன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.

The post விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு ரயிலில் தப்பிச் செல்லும் ராஜஸ்தான் கொள்ளையர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Chennai ,Jaipur ,
× RELATED ஒருவர் இந்துவா? இல்லையா? என்பதை அறிய...