×

மின்னல் தாக்கி பட்டாசு ஆலை இடிந்தது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. சிவகாசி அருகே மீனம்பட்டியில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியது. இதில் ஒரு அறை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு அறை முற்றிலும் இடிந்து சேதம் அடைந்தது.

The post மின்னல் தாக்கி பட்டாசு ஆலை இடிந்தது appeared first on Dinakaran.

Tags : Shivakasi ,Virutunagar district ,Sivakasi ,Meenambatti ,Dinakaran ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...