சென்னை: கே.கே.நகரை சேர்ந்தவர் அலோசியஸ் ஜோசப். தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளர். சில தினங்களுக்கு முன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலை வீடு திரும்பிய அவர், பீரோவிலிருந்த 31 சவரன் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்தபுகாரின் அடிப்படையில் வடபழனி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
The post நிதி நிறுவன மேலாளர் வீட்டில் 31 சவரன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.
