×

யு.டி.எஸ். நிதி நிறுவனம் ரூ.150 கோடி முதலீடு பெற்று மோசடி என பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்

கோவை: யு.டி.எஸ். நிதி நிறுவனம் ரூ.150 கோடி முதலீடு பெற்று மோசடி என பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். 2017-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் பல்வேறு கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, நிதி நிறுவனம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 31-ம் தேதி கோவையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புகார் மேனாவை நடத்தினர்.

The post யு.டி.எஸ். நிதி நிறுவனம் ரூ.150 கோடி முதலீடு பெற்று மோசடி என பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : U.T.S. ,Coimbatore ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி