×

மனைவியை அனுப்ப மறுத்ததுடன் குச்சியால் அடித்ததால் ஆத்திரம் கல்லால் தாக்கி மாமனாரை கொன்ற மருமகன் கைது: சேலம் அருகே பரபரப்பு

சேலம்: சேலம் அருகே மனைவியை அனுப்ப மறுத்ததுடன் குச்சியால் அடித்த ஆத்திரத்தில் கல்லால் தாக்கி மாமனாரை கொன்ற மருமகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டி ஆண்டிக்காட்டை சேர்ந்தவர் மருதை(எ) ஊசி(60). கூலித்தொழிலாளி. இவரது மகள் தனலட்சுமியை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உலிபுரம் பக்கமுள்ள புங்கமரத்துக்காட்டை சேர்ந்த சரவணன்(40) என்பவருக்கு திருமணம் செய்து ெகாடுத்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குடிபழக்கம் கொண்ட சரவணன், மனைவி மீது சந்தேகம் அடைந்து அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.

நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வந்த சரவணன் மனைவியை அடித்துள்ளார். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு தனலட்சுமி பெற்றோர் வீட்டிற்கு வந்தார். மனைவியை அழைத்து செல்ல சரவணன் குடிபோதையில் இரவு 10 மணிக்கு வந்துள்ளார். அப்போதும் தகராறில் ஈடுபட்டதுடன் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறியுள்ளார். `தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்துவாய்’ என கூறிய மாமனார் மருதை மகளை அனுப்ப முடியாது என கூறியுள்ளார். மேலும் கோபத்தில் சிறிய குச்சியை எடுத்து மருமகனை அடித்து விரட்டியுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த சரவணன், மாமனாரை கல்லால் தாக்கி கொன்றுவிட்டு தப்பி சென்றார்.

நேற்று காலை அங்குள்ள ஐயப்பன் கோயில் அருகில் மருதையின் உடல் கிடந்தது. இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் உடலை மீட்டு தலைமறைவான சரவணனை தேடிவந்தனர். இந்நிலையில அவர் கேரளா தப்பி சென்றது தெரியவந்தது. அவரது செல்போன் டவரை வைத்து விசாரணை நடத்தி, சரவணனை போலீசார் பிடித்தனர். `மனைவியை அனுப்ப மாட்டேன் என கூறியதுடன், குச்சியால் அடித்தார். அந்த கோபத்தில் அவரை கல்லால் தாக்கி கொலை செய்ததாக சரவணன் போலீசாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியை அனுப்ப மறுத்ததுடன் குச்சியால் அடித்ததால் ஆத்திரம் கல்லால் தாக்கி மாமனாரை கொன்ற மருமகன் கைது: சேலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு