×

விபத்தில் விவசாயி பலி

 

திருவாடானை, நவ.15: திருவாடானை அருகே குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உலகராஜா(45). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தேவகோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். திருவாடானை அருகே தொண்டி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோரத்தில் கவிழ்ந்ததில் உலகராஜா தலையில் பலத்த ரத்தகாயம் ஏற்பட்டது. தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post விபத்தில் விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Ullagaraja ,Kulathur ,Devakottai ,
× RELATED சாலையை மறைக்கும் முள் செடிகளை அகற்ற வலியுறுத்தல்