×

தேர்தல் நேரத்தில் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மாநகராட்சி வார்டுகளில் கூடுதல் பணிகளை நிறைவேற்ற கோரி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமாரை சந்தித்து இன்று மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சிக்கு கூடுதல் நிதி வேண்டும். இது குறித்து புதிய மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்.

வெற்றியை நோக்கி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் தொடங்க இருக்கிறார். தேர்தல் கூட்டணி என்பதை இப்போது முடிவு செய்யமுடியாது. எந்த கூட்டணி என்றாலும் மாறும். பாஜவுடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் நேரத்தில் கூட்டணி மாற வாய்ப்பு உள்ளது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Former minister ,Sellur Raju ,Madurai ,Minister ,Madurai Corporation ,Dinakaran ,
× RELATED திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும்...