×

எடப்பாடியை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு அரசு அனுமதி ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அனுமதி வழங்கியது அரசியல் காழ்ப்புணர்ச்சி என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டிடம் கட்டியதில் முறைகேடு என, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணை நடத்தக்கோரி தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது தமிழக அரசின் காழ்ப்புணர்ச்சி அரசியலை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

The post எடப்பாடியை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு அரசு அனுமதி ஜி.கே.வாசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,GK ,Vasan ,
× RELATED அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் ஆறுதல்