நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து பைக்கில் சென்ற தம்பதி லாரி ஏறி பலி

திருப்பூர் : திருப்பூர் அருகே தாராபுரம் ரோடு, கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் மணி (48). இவரது மனைவி கவிதா (43). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவர் பனியன் நிறுவனத்திலும், மனைவி மரக்கடையிலும் வேலை செய்தனர்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து புறப்பட்டு பைக்கில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பொல்லிகாளிபாளையம் அருகே திடீரென குறுக்கே தெருநாய் ஒன்று பாய்ந்தது. உடனே, பைக்கை கட்டுப்படுத்த முயன்றபோது, தவறி சாலையில் விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி, தம்பதி மீது ஏறி, இறங்கியது. அவர்களை பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், இருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து பைக்கில் சென்ற தம்பதி லாரி ஏறி பலி appeared first on Dinakaran.

Related Stories: