×

திமுக மின் கழகம் சார்பில் தொமுச புதிய நிர்வாகிகள் தேர்வு: தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. முன்னிலையில் தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன் ஆணையாளராகக் கொண்டு நடந்தது. நேற்று முன்தினம் (26ம் தேதி) வேட்பு மனு வழங்கல், வேட்பு மனுதாக்கல், வேட்பு மனு பரிசீலனை மற்றும் வேட்பு மனு திரும்பப் பெறுதல் ஆகிய தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில், நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மின்கழக மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக கே.சசிகுமார், பொதுச்செயலாளராக பா.மணிமாறன், பொருளாளராக டி.மெய்ஞானமூர்த்தி, அமைப்புச் செயலாளராக சி.கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாநில துணைத் தலைவர்கள் கோ.பிரபாகரன், கே.செல்வராஜ், கு.ராஜேந்திரன், ரா.தேசிங்கு, எம்.மீனாட்சி சுந்தரம் ஆகியோரும், மாநில துணைப்பொதுச்செயலாளர்களாக கி.வேல்முருகன், எஸ்.விஜயகுமார், கு.மணிகண்டன், எஸ்.எஸ்.தமிழ்செல்வம், ஆர்.சர்க்கரை, பி.சத்தியராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thomusa ,DMK , Election of new executives of Thomusa on behalf of DMK: Chief Announcement
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...