×

துறையூர் பகுதிகளில் மழை வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி

 

துறையூர், மே 1: துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் அரைமணிநேரம் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த வெயிலின் தாக்கத்தினால் முதியோர்கள், சிறு குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் கடந்த ஒரு தினங்களாக லேசான தூரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலைமுதல் துறையூர் பகுதிகளில் வெயில் இன்றி வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் குளிர்ச்சியான சீதோஷ்ணநிலையை அனுபவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை கருமேகம் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. துறையூர் சுற்று வட்டார பகுதிகளான எரகுடி, வடக்குப்பட்டி, புளியஞ்சோலை, காளிப்பட்டி, நரசிங்கபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்து ஈரக்காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post துறையூர் பகுதிகளில் மழை வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ditriyur ,Dutyur ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...